/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு
/
விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு
ADDED : பிப் 15, 2026 04:56 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், 5-வது வட்ட மாநாடு வட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பாலக்கோடு வட்டத்தில் உள்ள வீட்டுமனை பட்டா கேட்டு, மனு கொடுத்த ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை-வாய்ப்பு உறுதி சட்டத்தில் ஆண்டுக்கு, 200 நாள் வேலை தினக்கூ-லியாக, 600 ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்கவும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறை-வேற்றினர்.

