ADDED : டிச 02, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது.
அப்போது சமூகத்தில் எய்ட்ஸ் குறித்து தவறான புரிதல்களை நீக்குவது, நோய் தடுப்பு முறைகளை கடைப்பிடிப்பது, பிறரை விழிப்புணர்வு செய்யும் பொறுப்பை ஏற்பது, போன்ற வாசகங்களை கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ரகு, பசுமை படை ஆசிரியர் ராஜாமணி, ஆசிரியர் பார்த்திபன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

