sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

/

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : நவ 25, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, இண்டூர் அருகே, அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், நத்தஅள்ளி கிராமத்தில் அங்களம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நவ., 17- அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை நடந்தன.

பின்னர், மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, யாக சாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்களம்மன் மற்றும் விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நத்தஅள்ளி, இண்டூர், பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us