/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
/
மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 25, 2025 01:46 AM
தர்மபுரி, தர்மபுரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், மலேரியா நோய் எதிர்ப்புக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். இதில், தனியார் பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தர்மபுரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மலேரியா நோய் எதிர்ப்புக்கான, உறுதி
மொழியை ஏற்ற பின், விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, நகராட்சி லட்சுமி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சிவக்குமார், நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.