sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'

/

'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'

'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'

'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'


ADDED : ஜூன் 21, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பேசுகையில், 'அரூர் தொகுதியில் நாம் போட்டியிடுகிற அல்லது எந்த வேட்பாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அரூர் தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.

இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம், சீட் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பேசிய மாவட்ட செயலர் பழனியப்பன், 'அரூர் தொகுதியில் நாம் போட்டியிடுகிற அல்லது எந்த வேட்பாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அரூர் தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.

அவரின் இந்த பேச்சு தி.மு.க., தொகுதியில் போட்டியிடவில்லை என்றாலும், கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களில், தி.மு.க., கூட்டணியில், வி.சி.,- மா. கம்யூ., கட்சிகளுக்கு, அரூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது அக்கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் உள்ள நிலையில், மாவட்ட செயலரின் பேச்சு, வரும் தேர்தலில் அக்கட்சிகளுக்கு மீண்டும், அரூர் தொகுதி ஒதுக்கப்படும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். இதனால், தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வந்தவர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us