sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செயல்பாட்டிற்கு வந்த அரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்

/

செயல்பாட்டிற்கு வந்த அரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்

செயல்பாட்டிற்கு வந்த அரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்

செயல்பாட்டிற்கு வந்த அரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்


ADDED : நவ 12, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், நவ. 12-

தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கடந்த மாதம், 24ல் நடந்தது. பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்த போதிலும், பஸ் ஸ்டாண்டில் மின் இணைப்பு வழங்காதது, புறக்காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேர அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் முடிவடையாத காரணத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ந்து, வர்ணதீர்த்தம் முதல், பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதி சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த, 5ல் அரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நவ., 11 முதல், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் என, தாசில்தார் ராதாகிருஷ்ணன், அரூர் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, பஸ் ஸ்டாண்டில் நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று முதல் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்டிலுள்ள, 53 கடைகளுக்கு பொது ஏலம் விடப்படாததால் பூட்டப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us