/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது தாக்குதல்
/
கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது தாக்குதல்
ADDED : மே 09, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, மே 9
தர்மபுரி எட்டிமரத்துப்பட்டியில் ஓராண்டுக்கு முன், கழிவு நீர் கால்வாய் பிரச்னை தொடர்பாக, ஜிம் மாஸ்டர் பிரகாஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், 36, கைதாகி சிறை சென்றார். பின், ஜாமினில் வெளிவந்த அவர் நேற்று மாலை தன் வீட்டின் அருகே இருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் வெங்கடேைஷ இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தெருக்கூத்து மூலம்