sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் 'சீல்'

/

அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் 'சீல்'

அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் 'சீல்'

அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் 'சீல்'


ADDED : நவ 20, 2024 01:49 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, நவ. 20-

தர்மபுரி அருகே, அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில், 67 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைக்கு அருகில், மது பிரியர்கள் மது குடிக்க, பார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தர்மபுரி மாவட்டத்தில், 14 இடங்களில் பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மபுரி அடுத்த, முத்துகவுண்டன் கொட்டாயில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை வளாகத்தை வாடகைக்கு விட்டவர், டாஸ்மாக் அருகில், அரசின் அனுமதியின்றி பார் நடத்தி வந்தார். இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, விசாரணை செய்த, தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், முத்துகவுண்டன் கொட்டாய் மற்றும் அதியமான்கோட்டையில் அனுமதியின்றி செயல்பட்ட, 2 பார்களுக்கு, 'சீல்' வைத்தனர்.

இதில், டாஸ்மாக் மேலாளர் மகேஷ்வரி, தாசில்தார் செல்வகுமார், கலால் இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்.ஐ., கோபி மற்றும் தலைமை காவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us