/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
/
போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : டிச 07, 2024 07:29 AM
பென்னாகரம்: பென்னாகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அனைத்து மகளிர் போலீசார் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பென்னாகரம் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., தனம்மாள், அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டு, 'பெண் குழந்-தைகள் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறை, இளம் வயதில் திருமணம் செய்-வதால் ஏற்படும் விளைவு, சமூக வலை
தளங்களை மாணவ,- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்ப-டுத்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவதால்
உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, குற்ற செயல்களில் ஈடுபட துாண்டு-வது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன' என்று
விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவிகள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.