/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
/
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
ADDED : ஜன 21, 2025 06:18 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ் ஆலோசனைப்படி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளை தடுப்-பது குறித்த விழிப்புணர்வு, மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, புள்ளியியல் ஆய்வாளர் உஷாராணி தலைமையில், எஸ்.ஐ., சரவணன் மற்றும் கஜேந்திரன், காவேரி ஆகியோர், நல்-லம்பள்ளி அடுத்த, பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட பச்சியப்பன் கொட்டாய் பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் வயது திருமணம், பெற்றோர் கவன குறைவால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாய நல்லினக்கம், சாதிய வன்கொ-டுமை
உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பாலியல் தொல்-லையால் அதிகம் பாதிக்கபடுவதால், அது குறித்து தயக்கிமின்றி புகார் அளிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினர்.இதில், பாகலஹள்ளி பஞ்., செயலாளர் சிவகாமி, பஞ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.