ADDED : ஜூலை 07, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர்.
சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவ-சாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு
வந்திருந்தனர்.
கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்-றிலை கடந்த வாரம், 4,000 முதல், 10,000 ரூபாய் வரை விற்-றது. நேற்று, 6,000 முதல், 12,000 ரூபாய் வரை விற்பனையா-னது.
அதன்படி கடந்த வாரத்தை விட, 2,000 ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது. சந்தையில், நேற்று மொத்தம், 20 வெற்றிலை மூட்டைகள், 1.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.