/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்
/
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்
ADDED : நவ 24, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் முன்னா, 30. இவர், பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலித்-தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை தன் நண்-பர்கள், 8 பேருடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்தார்.
ஊட்டமலை பரிசல் துறை காவிரியாற்றில் நண்பர்களுடன் குளித்தார். அப்-போது முன்னா ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலின்படி சம்பவ இடம் வந்த ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் தீயணைப்-புத்துறையினர், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாவை தேடி வருகின்றனர்.

