ADDED : நவ 22, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரியில், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, பா.ஜ.,- ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று
நடந்தது.
மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வரும், 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இதற்கு ஓ.பி.சி., அணியினர் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். மேலும், ஓ.பி.சி., அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என
வலியுறுத்தினார்.

