நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தேசிய சேவா சமிதி சேவாபாரதி மற்றும் அரிமா சங்கம் இணைந்து, 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம், பாலக்கோடு, வித்யாமந்திர் பள்ளியில் நேற்று நடந்தது.
மருத்துவர் மோகனப்பிரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இளைஞர்கள் தன்னார்வலர்கள், உட்பட, 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அதேபோல, பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் கெயில் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.