ADDED : பிப் 16, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்ச நேயர் கோவிலின் சார்பில், சனிக்கிழமையை-யொட்டி நேற்று, ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்-தது.
தேரில், சிறப்பு அலங்காரத்தில், ராமர், லட்சுமணர், சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயர் அமர வைக்கப்பட்டு திருத்தேர் வீதி உலா நடந்தது. தேர், ஊத்தங்கரை நகரின் முக்கிய வீதிகள் வழி-யாக சென்றது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

