sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

/

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


ADDED : மே 25, 2025 01:19 AM

Google News

ADDED : மே 25, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி தர்மபுரி அடுத்த தடங்கத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 600 காளைகள் மற்றும், 525 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தடங்கம் மாரியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு நடந்த இப்போட்டியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார்.

மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன்முன்னிலை வகித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில், கோவில் காளை வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதை அடக்க ஏற்கனவே பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் வாடிவாசல் முன்பு, ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஒவ்வொரு குழுவாக, 525 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள், வாடிவாசல் வழியாக பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றனர்.

இதில் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர் மற்றும் காளைகளை அடக்கிய, மாடு பிடி வீரர்களுக்கு, பரிசுகள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டன. போட்டியையொட்டி தர்மபுரி நகரம் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் பாதுகாப்பு

பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us