/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 04:27 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் சிவசக்தி, 21; பி.காம் பட்டதாரி. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த, 23ல் நடுத்திட்டு பகுதியில், வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்தபோது வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலர் ஆலயமணி தலைமையிலான வனவர் பிரீத்தி சக்கரவர்த்தி உள்ளிட்ட, 4 பேர், அவர்கள் கொண்டு வந்த பொருளை வீட்டில் வைக்க முயற்சித்த-போது, வாலிபரிடம் தகராறு ஏற்பட்டதில் அவரை வனத்துறை-யினர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிவசக்தி புகார் படி, ஒகேனக்கல் போலீசார், வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனவர் பிரீத்தி சக்கரவர்த்தி மற்றும் அடையாளம் தெரியாத, 2 பேர் உட்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.