/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.1.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
/
ரூ.1.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
ADDED : ஜூலை 17, 2025 01:26 AM
அரூர், அரூர் அடுத்த புழுதியூர்
சந்தையில், 1.70 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, ஆடி பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 700க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம், ராசிபுரம், தர்மபுரி, பொம்மிடி, காரிமங்கலம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 9,300 முதல், 9,700 ரூபாய் வரை
விற்பனையானது. கடந்த வாரத்தை
ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 800 முதல், 1,200 ரூபாய் வரை, கூடுதல் விலைக்கு விற்பனை
யானது.
மேலும், கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 450 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 47,000 முதல், 68,000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9,000 முதல், 35,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடுகள், 90 லட்சம், ஆடுகள், 80 லட்சம் என, மொத்தம், 1.70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
நடந்தது என, வியாபாரிகள்
தெரிவித்தனர்.