ADDED : ஜூலை 10, 2026 04:49 AM

அ நிறம் | அளவு
அரூர்:அரூர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
அரூர் தாசில்தார் வள்ளி தலைமை வகித்தார். இதில், மக்கள்தொகை
கணக்கெடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள
கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு
கணக்கெடுப்பு பணிகள் குறித்து, பயிற்சி மற்றும் ஆலோசனை
வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம
உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
