/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு
/
சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு
சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு
சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு
ADDED : டிச 27, 2025 05:48 AM
மொரப்பூர்: சென்னை- - - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நின்று செல்-லும்படி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரம் வரையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12695, 12696) தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வழியாக தினமும் சென்று வருகிறது. இந்த ரயில், தர்மபுரி மாவட்-டத்தில் எந்த ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தம் இல்லை. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவ-டிக்கை எடுக்க, மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில், ரயில்வே அமைச்சர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் இடையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 2026 ஜன., 1 முதல், தினமும் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை, 5:30 மற்றும், இரவு, 7:05 மணிக்கு நின்று செல்ல, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில் பயணி-களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எக்ஸ்-பிரஸ் ரயிலை மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுத்த, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

