/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்
/
தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்
ADDED : ஆக 21, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையத்தை சேர்ந்த திருப்பதி என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்ததில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்த அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேரில் சென்று, தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, திருப்பதிக்கு ஆறுதல் கூறினார். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். நிர்வாகிகள் சாமிக்கண்ணு, ரவிக்குமார், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.