/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 31, 2025 12:58 AM
பென்னாகரம்,  தர்மபுரி மாவட்ட அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற, பென்னாகரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
தர்மபுரி மாவட்ட அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி செல்லியம்பட்டி துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, இடையேயான இறுதி போட்டி நடந்தது.
இதில், வெற்றி பெற்று, முதல் பரிசை  பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர். அவர்களை நேற்று, தலைமையாசிரியர் லோகநாதன் பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

