ADDED : ஜூலை 29, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு; பாலக்கோடு அடுத்த எருதுகூட அள்ளியை சேர்ந்தவர் சேகர், 38, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி அம்சவள்ளி, 31, தம்பதிக்கு, 3 மகள்-களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன், பெங்களூருக்கு மேஸ்திரி வேலைக்கு சென்ற சேகர் கடந்த, 26ல் ஊருக்கு வந்துள்ளார்.
தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், கொம்மநாயக்கனஅள்ளி முனியப்பன் கோவில் அருகில், இரவு, 7:40 மணிக்கு, ரோட்டை கடக்க சென்டர் மீடியனில் நின்றிருந்த சேகர் மீது, தர்மபு-ரியில் இருந்து வந்த ஸ்கோடா கார் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, பாலக்-கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
