ADDED : டிச 02, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி,: 'பெஞ்சல்' புயலால் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணி முதல் மாவட்டம் முழுவதும், பரவலாக கனமழை பெய்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அரூரில், 91.4 மி.மீ., மழை பதிவானது. மொரப்பூர் 86, பாப்பிரெட்டிப்பட்டி, 75, தர்மபுரி, 30, பாலக்கோடு, 15, பென்னாகரம், 12, மாரண்டஹள்ளி, 6 என, மாவட்டத்தில் சராசரியாக, 35.38 மி.மீ., பதிவானது. நேற்று பகலிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.