sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை

/

கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை

கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை

கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை


ADDED : பிப் 18, 2026 07:32 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரத்தில், 3,000 ஏக்கருக்கு மேல், ஆண்டு முழுவதும் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது. இதை, 45 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். சூளகிரியில் பெரிய அளவில் இயங்கும் கொத்தமல்லி மார்க்கெட்டில் இருந்து, சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கொத்தமல்லி சாகுபடி குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று ஒரு கட்டு, 15 முதல், 20 ரூபாய் வரையும், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கும் விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் ஒரு கட்டு, 25 ரூபாய், கிலோ, 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து, சூளகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது: இம்மாத துவக்கத்தில், விவசாயிகளிடம் ஒரு கட்டு கொத்தமல்லி, 5 ரூபாய்க்கும் குறைவாக வாங்கி கடைகளில், 10 ரூபாய் வரை விற்றது. தற்போது சாகுபடி குறைந்த நிலையில், விவசாயிகளிடம், 10 முதல், 13 ரூபாய் வரை வாங்கி வருகின்றனர். வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us