/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
/
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ADDED : அக் 14, 2024 06:26 AM
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்-களிலுள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவ-னங்களில் பணியாற்றுகின்றனர்.
ஆயுத பூஜைக்காக கடந்த வாரம் இவர்கள் ஊருக்கு வந்திருந்-தனர். 3 நாள் விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும், பணி-யாற்றும் இடங்களுக்கு செல்ல, நேற்று காலை, 11:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப, அவர்க-ளது பெற்றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏரா-ளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.