sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு

/

"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு

"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு

"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு


ADDED : ஆக 29, 2011 11:42 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., இருக்கையில் அமர்ந்து 'நான் தான் கலெக்டர்' என கூறி வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகள் பெற்று கொண்டு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கணேஷ் பங்கேற்று மனுக்களை ஆய்வு செய்தார். காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரையில் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., கணேஷ் மீட்டும் தனது அறைக்கு பகல் 12.30 மணிக்கு சென்ற போது, அவரது அறையில் அவரது இருக்கையில் மொட்டை அடித்த வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.



அதிர்ச்சி அடைந்த டி.ஆர்.ஓ., அந்த வாலிபரிடம் விசாரித்த போது, ''நான் தான் கலெக்டர் நீங்கள் யார்,'' என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வாலிபரை அறையில் இருந்து அகற்றினர். விசாரணையில், அந்த வாலிபர் தர்மபுரியை அடுத்த உழவன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி (33) என்பதும், பட்டதாரி வாலிபரான அவர் குரூப் தேர்வுகள் எழுதியிருப்பதாகவும், கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பதாகவும், அதில் அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டு டி.ஆர்.ஓ., அறைக்குள் புகுந்து அவரது இருக்கையில் அமர்ந்ததாக தெரிகிறது. போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us