/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு
/
சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு
ADDED : ஜூலை 19, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் இரண்டு லாரிகள், 4 சரக்கு வாகனம், பள்ளி பஸ் மற்றும் தேவீரஹள்ளியில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்ட எட்டு வாகனங்களில், மர்ம நபர்கள் டீசல் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள், பாரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.