/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
18ல் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு கோட்ட அளவில் குறைதீர் கூட்டம்
/
18ல் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு கோட்ட அளவில் குறைதீர் கூட்டம்
18ல் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு கோட்ட அளவில் குறைதீர் கூட்டம்
18ல் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு கோட்ட அளவில் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 11, 2025 06:32 AM
தர்மபுரி: கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டத்திற்கு, புகார்கள் அனுப்புவது குறித்து, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி கோட்ட அளவிலான, அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வரும், 18 அன்று தர்மபுரி கோட்ட அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதில், அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி 636 701 என்ற முகவரிக்கு வரும், 14க்குள் அனுப்ப வேண்டும். இதில், அஞ்சல் துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்களுக்கு, அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விபரங்கள் இருக்க வேண்டும். அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்களுக்கு, முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். மேற்கண்ட முழு விபரங்கள் அடங்கிய புகாரை அனுப்புவோர் அஞ்சல் உறையின் மீது, 'DAK ADALAT CASE' என குறிப்பிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.