/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்
ADDED : செப் 26, 2024 01:50 AM
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மீது, கோட்டப்பட்டி போலீசில், அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் தலைமையில், நிர்வாகிகள் கிருஷ்ண-மூர்த்தி, ஜெய்னுலாப்தீன் ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறி-யிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், கடந்த, 21ல் மாலை, அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாது-ரையின், 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசி-யுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.