ADDED : ஜன 11, 2026 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மேல்பாட்சாபேட்-டையை சேர்ந்தவர் அப்துல் அமீது, 49, ஆட்டோ டிரைவர்; இவர், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு தனக்கு சொந்தமான ஆட்டோவை, மொரப் பூர் - எலவடை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது, அய்யர் கொட்டாய், மாரி-யம்மன் கோவில் அருகில், திடீரென நாய் குறுக்கே வந்ததால்
அதன் மீது மோதாமல் இருக்க, ஆட்டோவை திருப்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அப்துல் அமீதுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். பின், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

