ADDED : ஜூலை 17, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 80, ஆடு மேய்த்து வந்தார். இவர், கடந்த, 14ல் மதியம், 2:00 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
நேற்று முன்தினம் ஆலம்பாடி தென்பெண்ணை ஆற்றின் ஏழு மதுரை முனியப்பன் கோவில் எட்டி மரத்து அடியில் தண்ணீரில் இறந்த நிலையில் வெங்கட்ராமன் கிடந்தார். அவரது உடலை மீட்டு, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.