ADDED : ஜூலை 15, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி
மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 1.51 கோடி ரூபாய் மதிப்பில்
நவீன எரிவாயு தகன மேடை கடந்த, 2023 - 24ல் கட்டப்பட்டது. இரண்டு
ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.
இது குறித்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறியதாவது:
பொ. மல்லாபுரம் பேரூராட்சி, பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைந்துள்ளது.
இதை
போதிமரம் அறக்கட்டளை மூலமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி இறந்தவர்களின் உடல் எரிப்பிற்கு சேவை
கட்டணமாக, 3,700 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
