ADDED : செப் 09, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, அண்ணாமலைஹள்ளியை சேர்ந்த விவசாயி இளங்கோ, 56; இவர் நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு அவருடைய விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
அப்போது, கிணற்றிலிருந்த மின் மோட்டாரை திருடி சென்றவரை அப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.