/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 24, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், டிச. 24-
அரூரில், தேசிய மின் சிக்கன
வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரூர் கோட்டம் சார்பில், நேற்று அரூர் மின்வாரிய அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, அரூர் செயற்பொறியாளர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மின்வாரிய அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.