sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

/

தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை


ADDED : ஏப் 20, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தர்பூசணி விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு, ஒரு டன் தர்பூசணி, 25,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், நடப்பாண்டு, பல இடங்களில் விவசாயிகள் ஆர்வத்துடன் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தர்பூசணியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கிரேன் எனப்படும் ரகம். எந்த பருவத்திலும் விளையும், 60 நாட்களில் மகசூல் தரக்கூடியது. ஏக்கருக்கு, 50,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது. இந்தாண்டு, கிரேன் தர்பூசணி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. தற்போது, டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,000 ரூபாய் வரை தான் விற்கப்படுகிறது. அந்த விலை கொடுத்து வாங்குவதற்கும் வியாபாரிகள் யாரும் வராததால், தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் வயலில் தேக்கமடைந்துள்ளன. இதனால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us