/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
யானை தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்
/
யானை தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 24, 2024 03:06 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, யானை தாக்கி பலியான விவசாயியின் உறவினர்கள், -வனத்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்-டியை சேர்ந்த விவசாயி துரைசாமி, 68. இவரது நிலத்தில், நிலக்க-டலையை பயிரிட்டிருந்ததால், நேற்று முன்தினம் இரவு அந்த தோட்டத்தில் காவலில் ஈடுபட்டார்.
நேற்று அதிகாலை, அங்கு வந்த ஒற்றை ஆண் யானை தாக்கியதில் பலியானார். ஆத்திரம-டைந்த அவரது உறவினர்கள், துரைசாமியின் சடலத்தை எடுக்க விடாமல், வனத்துறையினரை கண்டித்து, பாலக்கோடு - பெல்ரம்-பட்டி
சாலை செங்கோடபட்டியில், மறியலில் ஈடுபட்டனர். அப்-போது, சமீபத்தில் தீத்தாரப்பட்டியில் முதியவரை, இதே ஒற்றை யானை மிதித்து கொன்ற நிலையில், மீண்டும் ஒருவரை கொன்-றுள்ளது. யானை நடமாட்டம் குறித்து
தெரிந்தும், அதை அடர்ந்த காட்டுக்குள் விரட்டாமல், வனத்துறையினர் வேடிக்கை பார்ப்-பதால், மனித உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க முடிய-வில்லை என குற்றம் சாட்டினர்.அவர்களிடம், பாலக்கோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின், முதிய-வரின் சடலத்தை போலீசார் மீட்டு
விசாரணை நடத்தி வருகின்-றனர்.