ADDED : டிச 16, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே டி.கொத்தப்-பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏங்கப்பா, 63. விவசாயி; இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு தன் நிலத்தில் சாகுபடி
செய்துள்ள ராகி பயிரை பார்க்க சென்றார்.
அப்போது, அவரது நிலத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, ஏங்கப்பாவை விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்-தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.