sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெற்பயிரில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

/

நெற்பயிரில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

நெற்பயிரில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

நெற்பயிரில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை


ADDED : அக் 21, 2025 01:03 AM

Google News

ADDED : அக் 21, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்குதல் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், நரிப்பள்ளி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம், மாம்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, பறையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், 7,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்காக அவர்கள் ஏக்கர் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

தற்போது இந்த நெற்பயிர் செழித்து வளர்ந்துள்ள நிலையில் அதில் ஆனைக்கொம்பன், வெள்ளை முறியான், செம்பை நோய் மற்றும் இலைக்கணு புழு தாக்குதலால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோயினால் எதிர்பார்த்த அளவு பயிர்களின் வளர்ச்சி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், மகசூலும் பாதிக்கப்படும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தீவிர நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வயல்களில் தெளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் விவசாயிகள் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண் அதிகாரிகள் நோய் தாக்கிய நெற்பயிரை ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us