/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாய்ந்த மின் கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
/
சாய்ந்த மின் கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
ADDED : நவ 25, 2024 01:44 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே தாளநத்ததில் விவசாய நிலத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்-ளனர்.
கடத்துார் அருகே தாளநத்தம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாயம், கால்நடை வளர்ப்பு பிர-தான தொழிலாக உள்ளது. கடந்த பல மாதங்களாகவே விவசாய நிலத்திலுள்ள மின் கம்பங்கள் சாய்ந்து நிலையில் மிக ஆபத்-தான நிலையில் உள்ளன. இதுகுறித்து மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது: தாள-நத்தம் -வேப்பிலைப்பட்டி செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. எப்போது விழுமோ என்ற அச்சத்தால் விவசாயம் செய்ய அச்-சப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும்போது, கீழே விழுந்து விடுமோ என்ற நிலை உள்ளது. எனவே, மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தன