sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காட்டெருமைகளால் பயிர்கள் நாசம்இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

காட்டெருமைகளால் பயிர்கள் நாசம்இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

காட்டெருமைகளால் பயிர்கள் நாசம்இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

காட்டெருமைகளால் பயிர்கள் நாசம்இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : மே 04, 2025 01:20 AM

Google News

ADDED : மே 04, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:சித்தேரி மலையில் உள்ள விவசாய நிலங்களில் காட்டெருமைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால், அவற்றிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி

மலை கடல் மட்டத்திலிருந்து, 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் பயிர்களை மேய்வதுடன், அவற்றை நாசம் செய்து விட்டு செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பீன்ஸ், நெல், ராகி, சாமை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். பயிர் நடவு செய்வது முதல், அதை காப்பாற்றி அறுவடை செய்வது வரை பெரும் சவாலாக உள்ளது. காட்டெருமைகள் பயிர்களை நாசம் செய்வதைத் தடுக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. காட்டெருமைகளை தடுக்க நிலத்தை சுற்றி துணிகள் கட்டுதல், பொம்மைகளை வைப்பது, இரவு நேரங்களில் குடில் அமைத்து தீப்பந்தத்துடன் காவல் இருப்பது என விவசாயிகள் மேற்கொண்ட எந்த யுக்தியும் எடுபடவில்லை. கூட்டம், கூட்டமாக வரும் காட்டெருமைகள் பயிர்களை மேய்ந்து விட்டு செல்கின்றன. மேலும், காட்டெருமைகளை விரட்டினால், அவை திருப்பி தாக்க வருவதால், விவசாயிகள் பீதியுடன் நடமாட வேண்டியுள்ளது.

இதுகுறித்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதமான

பயிர்களுக்கு வனத்துறை சார்பில், இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதற்கு எந்த நிரந்தர முடிவும் எடுக்க முடியாமல் அனைத்து விவசாயிகளும், வேதனைப்பட்டு வருகிறோம். விவசாய பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தவும், நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us