/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 05:52 AM

தர்மபுரி: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அசோக்குமார், சுகாதார செவி-லியர் சங்க தலைவி செல்வி ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
இதில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்க-ளுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூ-திய திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகையையும் வட்டியுடன் சேமநல நிதியாக மாற்ற வேண்டும். கிராம உதவியாளர், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்-புற நுாலகர், எம்.ஆர்.பி., செவிலியர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்-தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்-பட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

