/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களுக்கு அபராதம்
/
வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களுக்கு அபராதம்
ADDED : ஜன 09, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரி செலுத்தாமல், சாலை விதிகளை மீறி வாக-னங்கள் இயக்கப்பட்டு வருவதாக, தர்மபுரி வட்டார போக்குவ-ரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவின்படி, தர்மபுரி பறக்கும் படை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் பென்னாகரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டார். அப்போது, போக்குவரத்து விதிகளை மீறி, சாலை வரி செலுத்தாமல் இயக்-கப்பட்ட பொக்லைன், கிரேன் உட்பட, 7 வாகனங்களின் உரிமை-யாளர்களிடமிருந்து, 2.34 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்-பட்டது.