sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பட்டாசு வெடித்ததில் பிளாஸ்டிக் குடோனில் தீ பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

/

பட்டாசு வெடித்ததில் பிளாஸ்டிக் குடோனில் தீ பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

பட்டாசு வெடித்ததில் பிளாஸ்டிக் குடோனில் தீ பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

பட்டாசு வெடித்ததில் பிளாஸ்டிக் குடோனில் தீ பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்


ADDED : அக் 21, 2025 02:09 AM

Google News

ADDED : அக் 21, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்றல் நகர் பகுதியில் கமல் பாட்ஷா, 40, என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில் தெருவில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பறந்து பிளாஸ்டிக் குடோனில் விழுந்ததில், தீப்பிடித்தது.

அப்போது பலத்த காற்று வீசியதால், தீ வேகமாக மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வாலாஜா தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், குடோன் முழுவதும் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்த வாலாஜா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us