/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெங்கடசமுத்திரத்தில் தீ தடுப்பு செயல்விளக்கம்
/
வெங்கடசமுத்திரத்தில் தீ தடுப்பு செயல்விளக்கம்
ADDED : ஏப் 18, 2025 01:31 AM
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம், 4 ரோட்டிலுள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.
தீ தொண்டு வாரத்தையொட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை வகித்தார்.
இதில், தனியார் நிறுவனத்தில், தீ விபத்து ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, முதலுதவி செய்தல், தீயணைப்பு உபகரணங்கள் பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. தீயை அணைப்பது குறித்து பெண்கள் பயிற்சி பெற்றனர்.