/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 08, 2025 01:44 AM
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த கொட்டாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பென்னாகரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சந்தோஷம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், தீ தடுப்பு நடவடிக்கைகள், வீட்டிலுள்ள சமையல் காஸ் தீப்பிடித்தால் அதை அணைக்கும் முறை, நீர்நிலைகளில் விழுந்தவரை காப்பாற்றுதல், பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல், போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்களிடையே செய்து காட்டினர்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். பள்ளியின் ஆசிரியர்கள் சுரேஷ், செல்வம், சுரேஷ், ஸ்ரீமதி மற்றும் திரளான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.