/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
ADDED : அக் 06, 2025 04:01 AM
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தர்மபுரி மாவட்டம், கம்பை நல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலி-ருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்-பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்-டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலி-ருந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 2,618 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்ப-ணையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைக்கு செல்ல, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
தென்பெண்ணையாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.