/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி
/
ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி
ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி
ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி
ADDED : அக் 06, 2025 04:02 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் கடந்த, 3 நாட்களாக மின்சாரம் தடைபட்டு உள்-ளதால், அங்குள்ள கழிவறை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த
அவதிக்குள்ளானர்.
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்-களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்-றனர். கடந்த வெள்ளிக் கிழமை இரவில் இருந்து, 3 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பய-ணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அங்குள்ள பொதுகழிவறையில் தண்ணீர் இல்லாததால், பூட்டி வைக்கப்பட்-டுள்ளது. ஊட்டமலை, ஒகேனக்கல், சத்திரம், சாணர்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டால் தண்ணீர் இன்றி மிகுந்த அப்-பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஒகே-னக்கல்லில் உள்ள ஐஸ்கிரீம், பால், மீன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் வீணாகும் சூழல் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையத்தில் தண்ணீர் எடுக்க முடியா-ததால், குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக மின்வெட்டை சரிசெய்து மின்சாரம் வழங்க, மாவட்ட
நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.