ADDED : மார் 08, 2026 07:15 AM
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர்-அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில்
தேரோட்டத்தை முன்னிட்டு, பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற
முதியோர்களுக்கு நேற்று பொது மருத்துவம் மற்றும் இலவச கண்
பரிசோதனை முகாம் நடந்தது.
தீர்த்தமலை வனச்ச-ரக அலுவலக வளாகத்தில்
நடந்த முகாமை, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி
வைத்தார்.இதில், 77 பேருக்கு பொது மருத்துவம் பரிசோதனை மற்றும்
சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சுகாதாரம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற கண் மருத்துவ
உதவியாளர் கலையரசன் பொதுமக்களுக்கு கண்பரி-சோதனை
மேற்கொண்டதுடன், கண் தானம் குறித்து விழிப்பு-ணர்வு
ஏற்படுத்தினார். முகாமில், மருத்துவர் தீபிகா, செவிலியர் கயல்விழி
உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர்.

