ADDED : மே 24, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி, பழைய ஒட்டுப்பட்டியில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
ஆயுஸ் மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுணா தேவி, உதவி மருத்துவ அலுவலர் தினகரன், உதவி பணியாளர் காவியா ஆகியோர், முகாமில் பங்கேற்ற மக்களுக்கு ஆலோசனை, சிகிச்சை வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர். கவுன்சிலர் விஜயலட்சுமி, குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் துரைராஜ், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.